0



சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில்பாண்டிராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.


இந்த படப்பிடிப்பில் சிம்புவும், நயன்தாராவும் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.


ஆறேழு வருடங்கள் கழித்து இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.


அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன் இசையை லயித்துக்கேட்ட சிம்புவும் பாண்டிராஜும் ‘நீ நல்லா வருவடா’ என ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்கள்.


சிம்பு தன் தம்பியை 'நல்லா மியூசிக் பண்றான்' என  பார்ப்பவர்களிடம் புகழ்ந்து தள்ளுகிறாராம்.

Post a Comment

 
Top