0
 

ஆருஷி வாழக்கை கதையை படமாக்க அனுமதி தந்தால் அவரது பெற்றோருக்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாக லண்டன் பட அதிபர் அறிவித்துள்ளார்.

நொய்டாவை சேர்ந்தவர்கள் பல்டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார், நுபுர்த்தல்வார். இவர்களது மகள் ஆருஷி. இவரும் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதுதொடர்பாக இந்த வழக்கில் ஆருஷி, ஹேம்ராஜூவை ஆருஷியின் பெற்றோரே கொலை செய்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆருஷி கதையை புத்தகமாகவும் சினிமா படமாகவும் தயாரிக்க உள்ளதாக லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் படத்தயாரிப்பாளருமான கிளிப் ரன்யார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தல்வார் குடும்பத்திற்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா வந்த தல்வார் தம்பதியினரை சிறையில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

சிறை விதிப்படி 15 நாட்களில் 3 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். தல்வாரின் உறவினர்கள் 3 பேர் ஏற்கனவே சந்தித்து உள்ளனர். எனவே 14 நாட்களுக்கு பிறகுதான் தல்வாரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்றார்.

தல்வார் தம்பதிகள் நலமுடன் இருக்கின்றனர். சிறையில் பல் மருத்துவ முகாம் நடத்தி கைதிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனர் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top